Saturday, 29 March 2014

Ippozhumthan..

மனைவியின்  சுடிதார் 
காற்றில் பறக்கையில் ....

குழந்தை கையை நீட்டும்போது

ஓரத்தில் மாட்டப்பட்டுள்ள 
சுமைதாங்காத புத்தகப்பையை  

பகலிலும் 

அணைக்கமறந்து விடும்போது 

சைடு ஸ்டான்டுடன் 
புறப்பட்டுவிடும்போது

என 
ஒவ்வொன்றின்போதும்
யாரோ ஒருவர் 
தனது வேகத்தை 
நிதானமாக்கி 
நினைவூட்டுகின்றனர் .

சற்றுநேரம்களித்தே 
உணர முடிகிறது . 
வீசிச்சென்ற பேரன்பை .








No comments:

Post a Comment